Saturday, September 28, 2013

ஜலதோஷம் வந்தா ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்னு, வெந்நீர் குடிச்சா... ஜலதோஷம் குறையுறதோட தும்மலும் நின்னுடும். கூடவே... நீர்க்கடுப்பு, நீர்எரிச்சல் இதெல்லாமும் குணமாகும். நெஞ்சு படபடப்பு வந்தாலும், சின்ன வெங்காயத்தை தின்னு வெந்நீர் குடிச்சா, உடம்பு சமநிலைக்கு வந்துடும். இதய நோயாளிகளுக்கு இப்படிப்பட்ட பிரச்னைகள் வரும்போது... முதலுதவி சிகிச்சையா இதை செய்யலாம். பொடியா நறுக்கின சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தா... ரத்தக்கொதிப்பு குறைஞ்சு, இதயம் பலமாகும்.
மூல நோயால அவதிப்படுறவங்க சாப்பாட்டுல அதிகமா சின்ன வெங்காயம் சேர்த்துக்கறது நல்லது. நீர்மோர்ல சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடிச்சாலும் பலன் கிடைக்கும். வெளிமூலம் உள்ளவங்க, சின்ன வெங்காயத்தை வதக்கி, பிரச்னை உள்ள இடத்துல வெச்சுக்கிட்டா... பலன் கிடைக்கும் (வெள்ளை வெங்காயத்தை அப்பப்போ நல்லெண்ணய் விட்டு வதக்கிச் சாப்பிட்டாலும் மூல உபத்திரவம் குறையும்).

பொடுகுத் தொல்லை, முடிகொட்டுதல்னு அவதிப்படுறவங்களுக்கும் சின்ன வெங்காயம் நல்ல பலன் தரும். சின்ன வெங்காயத்தை மையா அரைச்சுக்கோங்க. இதை, நாட்டுக்கோழி முட்டையோட வெள்ளைக்கருவுல சேர்த்து, ஆம்லெட்டுக்கு அடிக்கிற மாதிரி நல்லா அடிச்சுக்கணும். இல்ல, மிக்ஸியில போட்டு ஒரு சுத்து சுத்தினாலும் சரி. இப்படி செய்றப்ப... ஷாம்பு மாதிரி பொங்கி வரும். அதை அப்படியே தலையில தேய்ச்சி, அரை மணி நேரம் கழிச்சி வெதுவெதுப்பான தண்ணியில குளிக்கணும். முட்டை நாத்தம் போகறதுக்கு, நல்ல சிகைக்காய் பவுடரை போட்டு தேய்ச்சி குளிக்கணும். வாரத்துல ஒருநாள் வீதம், ரெண்டு மாசத்துக்கு இப்படி செய்தா... தலைமேல பலன் கிடைக்கும்.

தேள் கொட்டின இடத்துல வெங்காயச்சாறை தேய்ச்சா விஷம் ஏறாது. தலை பகுதியில சொட்டை விழுந்து முடி முளைக்காம இருந்தாலும் சின்ன வெங்காயத்தை தேய்ச்சி வந்தா... காலப்போக்குல முடி முளைக்கும். ஆம்பளைங்களுக்கு மீசை பகுதியில இப்படி சொட்டை இருந்தாலும், இதே வைத்தியத்தை செய்யலாம்!
பயனுள்ள தீர்வு முறைகள்:
கன்யாகுமாரியின், விவோகானந்தா(கேந்தரா) இயற்கை வளமேம்பாட்டுத் திட்ட நிலைய சமூக விஞ்ஞானியான திரு.எஸ்.அரவிந்த் கூறுகையில் இத்தயாரிப்புகள் பயிர் தாக்குதலை ஏற்படுத்தும் பூச்சிகளை தற்காலிகமாக தடுக்க உடனடி தீர்வு அளிக்கும். மேலும் இது விவசாயிகளை கடனாளிகள் ஆவதை தடுக்கும் என்று கூறுகிறார்.

எளிய முறையில் கிடைக்கும் தயாரிப்புகள்:
“இயற்கை பூச்சி தடுப்பு தயாரிப்புகள் விவசாயிகளிடையே பிரபலமானதற்கான முக்கிய காரணம், இதை தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் எளிதில் கிடைக்கக்கூடிய, குறைந்த முதலீட்டிலுடைய பொருட்களாகும். மேலும் இத்தயாரிப்புகள் நல்ல பயனுள்ளதாக இருக்கும் காரணத்தினால் ஆகும்” என்று திரு.எஸ். அரவிந்தன் கூறினார். பப்பாளி இலையை கொண்டு பூச்சி விரட்டி தயாரித்து, அதை விவசாயிகள் உபயோகித்தனர். இதை தயாரிக்க சுமார் 1 கிலோ பப்பாளி இலையை தண்ணீரில் நன்கு நனைத்து, ஒரு இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும். பின் இவ்விலைகளை நன்கு அரைத்து, தண்ணீரில் கலந்து, பயிர்களுக்கு தெளிக்கலாம். புங்கைச் சாறு நான்கு விதமாக தயாரிக்கப்படுகிறது. முதன் முறையில், புங்கையின் இலையை தலா 1 கிலோ எடுத்து ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் நனைத்து வைக்க வேண்டும். பின் அதை அரைத்து 5 லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்களாம். இரண்டாவது முறையில் புங்கையின் விதைகளை சுமார் 50 கிராம் எடுத்து அதை அரைத்து தண்ணீரில் நனைத்து ஒரு இரவு முழுவதும் வைத்திருக்கவும். பின் அதை 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்க உபயோகப்படுத்தலாம். மூன்றாவது முறையில், புங்கைப் புண்ணாக்கு சுமார் 100 கிராம் எடுத்து, அதை தண்ணீரில் நனைத்து சிறு நேரம் கழித்து, அதை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

இதே முறையில், புங்கை புண்ணாக்குடன், வேப்புண்ணாக்Ìம் கலத்து உபயோகிக்கலாம். இதில் கூடுதலாக அரை லிட்டர் கற்றாழழை சாறும், 3 லிட்டர் மாட்டின் சிறுநீர¸ம் கலக்கப்படவேண்டும். இந்த கலவையை 15 லிட்டர் தண்ணீரில் ஊறப்§À¡ட்டு ஒரு முழு இரவு வைத்து இருக்கவும். அடுத்Ð இக்கரைசலில் இருந்து 6 லிட்டர் கலவையை ±டுத்து 60 லிட்டர் தண்ணீரில் கலந்து உபயோகிக்கலாம். சில விவசாயிகள் துளசி இலைகளையும் பயிர் பூச்சி தாக்குதலுக்Ì உபயோகிக்கின்றனர். சுமார் 100 கிராம் துளசி இலை தண்ணீரில் நனைத்து, ஒரு நாள் இரவு முழுவதும் வைக்க வேண்டும். அடுத்த நாள் இதில் 2 லிட்டர் தண்ணீர் சேர்க்கப்பட்டு தெளிக்கப்பட வேண்டும். இதே போல், 1 கிலோ மஞ்சளை, சுமார் 1 லிட்டர் மாட்டு சிறுநீÕடன் கலந்து ஒரு þரவு முழுவதும் வைக்கவும், பின் மஞ்சளை எடுத்து அவற்றை நன்கு அரைத்து, 30 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
இப்புங்கை சாறுத் தயாரிப்புப் போல வேம்புச் சாறும் மூன்று வகையில் தயாரிக்கலாம்.
முதல் வகையில், சுமார் 6 கிலோ வேம்பு இலையை தண்ணீரில் நனைத்து ஒரு இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும். பின் அடுத்த நாள் அதை நன்கு அரைத்து, 60 லிட்டர் தண்ணீரில் கரைத்து, தெளிக்க பயன்படுத்தலாம்.
இரண்டாவது வகையில், சுமார் 3 கிலோ வேம்பு விதைகளை தண்ணீரில் நனைத்து ஒரு நாள் இரவு முழுவதும் வைத்து அதை அரைத்து கூழாக்கி பின் 60 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம்.
மூன்றாவது வகையில், சுமார் 6 கிலா வேப்பபுண்ணாக்கினை நன்கு அரைத்து ஒரு நாள் இரவு முழுவதும் வைத்து, அதை 60 லிட்டர் தண்ணீரில் கலந்து, தெளிக்க பயன்படுத்தலாம்.
மேலும், சில விவசாயிகள் பொதுவான இலைச்சாறு ஒன்றையும் உபயோகிக்கின்றனர். அது “மூன்று இலைக்கரைசல்” எனப்படும். இக்கரைசல் தயாரிக்க சுமார் 3 கிலோ எருக்கு, வேம்பு மற்றும் நொச்சி இம்மூன்றையும் சுமார் 3 லிட்டர் மாட்டு சிறுநீரில் நனைத்து 2 லிட்டர் தண்ணீரில் ஊறவிடவேண்டும். இதை ஒரு இரவு முழுவதும் வைத்து, பின் இதை வடிகட்டி, மீண்டும் 60 லிட்டர் தண்ணீர் கலந்து, உபயோகிக்கலாம். வழக்கமாக கரைச்சலை வடிகட்ட தூய பருத்தித் துணியை பயன்படுத்தவேண்டும். மேலும் இதனுடன் ஒரு லிட்டர் கரைசலுக்கு 4 கிராம் காதி சோப் கரைசலை சேர்த்து, தெளிக்கலாம்

வளமையான அறிவு:
இக்கரைசல்கள் அனைத்தும் வெற்றிகரமானதாக இருப்பினும், இவை அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பதை இதை உபயோகிக்கும் ஒவ்வொருவரும் நினைவு கூறவேண்டும். மேலும் இதன் உபயோகம் என்பது, பாரம்பரிய அறிவனை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு இடத்திற்கும், பகுதிக்கும், பூச்சிக்கும் மாறுபடும்.
மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து இலை சாறுகளும் கதிர் நாவாய் பூச்சி, இலை சுருட்டுப்புழு, தண்டுத்துளைப்பான், இலைப்பேன், அஸ்வினி போன்றவற்றை கட்டுப்படுத்துவதாக திரு.அரவிந்தன் கூறுகிறார்.
தொடர்புக்கு: திரு.எஸ்.அரவிந்தன், சமூக விஞ்ஞானி, விவேகானந்தா இவற்றை வேளாண் மேம்பாட்டு திட்ட நிலையம், நார்தீப், விவேகானந்தபுரம், கன்யாகுமரி - 629 702
தமிழ்நாடு இந்தியா
மின்னஞ்சல் ngc_vknardep@sancharnet.in மற்றும் ஒரு முகவரி
அலைபேசி: 9443748714
தொலைபேசி: 04652 - 247126, 04652 - 246296